×

செம்பனார்கோயில் பகுதியில் குறுவை நெல் சாகுபடி பணி விறுவிறுப்பு

செம்பனார்கோயில், மே 6:செம்பனார்கோயில் பகுதியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குறுவடை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில், ஆறுபாதி, பரசலூர், மேமாத்தூர், காளகஸ்திநாதபுரம், மடப்புரம், ஆக்கூர், முடிகண்டநல்லூர், மேலப்பாதி, திருச்சம்பள்ளி, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கீழையூர், தலைச்சங்காடு, கிடாரங்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், தற்போது குறுவை நெல் சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர். அந்த வகையில் கூடலூர் கிராமத்தில் விவசாயிகள், வயலை நன்கு உழுது தண்ணீர் பாய்ச்சி நடவு மேற்கொள்ள நாற்றங்கால் அமைத்திருந்தனர். இதனை தொடர்ந்து விவசாய தொழிலாளர்கள், நாற்றுகளை பிரித்து நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து குறுவை விவசாயிகள் கூறுகையில், இந்த பகுதியில் பெரும்பான்மையாக செய்யப்படுவது விவசாயம் தான். இதனால் கால சூழ்நிலைக்கு ஏற்ப சம்பா, குறுவை என்று அடுத்தடுத்து விவசாய பணி மேற்கொண்டு வருகிறோம். மேலும் இந்த பகுதியில் பருத்தி சாகுபடியும் அதிக அளவில் செய்யப்படுகிறது. தற்போது குறுவை பருவம் என்பதால் அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம்.

இதனை முன்னிட்டு வயலை நன்கு உழுது பம்புசெட் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சி நாற்றங்கால் தயார் செய்தோம். அதன் பயனாக தற்போது நடவுக்கு நாற்றுகள் தயாராகிவிட்டன. இதனால் நாற்றுகளைப் பறித்து நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

நிலத்தடிநீர் பாசனத்தை வைத்து பணிகளை தொடங்கினாலும், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் தொடர்ந்து சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். தேவையான உரம், பூச்சிமருந்து, நுண்ணுயிர் மருந்துகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

The post செம்பனார்கோயில் பகுதியில் குறுவை நெல் சாகுபடி பணி விறுவிறுப்பு appeared first on Dinakaran.

Tags : Sembanarkoil ,Mayiladuthurai District ,Arupadi ,Parasalur ,Memathur ,Kalakastinathapuram ,Madappuram ,Akur ,Mudikandanallur ,Melapadi ,Thiruchampalli ,Karuvazhakarai ,Kanchananagaram ,Geeyoor ,Thalichangadu ,
× RELATED செம்பனார்கோயில் அருகே ஆறுபாதியில்...